அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் மோதல்: பரஸ்பர தாக்குதல்களுக்குப் பின்னர் ட்ரம்பும் ஈரானும் புதிய எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களை நடத்திக்கொண்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஈரானின் உயர் அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
ஈரான் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு "மிகவும் தாமதம்" செய்துவிட்டதாகவும், இதனால் தற்போது அதற்கான "விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்றும் ஜனாதிபதி ட்ரம்ப், எவ்வித குறிப்பிட்ட விவரங்களையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.
ஈரானிய இலக்குகள்
மேலும் ஈரான் "முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டது" என்றும், அது "வெறும் பேச்சு மட்டுமே, செயலில் ஒன்றுமில்லை" என்றும் அவர் சாடியுள்ளார்.
முன்னதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தங்கள் நாடு "எந்தவொரு தாக்குதலுக்கும் அல்லது அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது" என்று எச்சரித்திருந்ததோடு, போர்க்களத்தில் அமெரிக்கா "தோல்விகளைச் சந்தித்துள்ளது" என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. வளைகுடா பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் 'அப்பாச்சி' (Apache) ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஈரானிய இலக்குகள் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்தது.
இதற்குப் பதிலடியாக ஈரான், அப்பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள், தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் ரேடார் தளங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
"ஈரானின் இராணுவம்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), பஹ்ரைன் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் உட்பட 21 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது. அதே நேரத்தில் குவைத்தும் தங்கள் வான்பரப்பில் வந்த தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியதாக அதன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப்: "ஈரானின் இராணுவம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படையின் பெரும்பகுதி இப்போது இல்லவே இல்லை - அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குச் சாதகமாக இருந்திருக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைப் பேசி முடிப்பதற்கு அவர்கள் நீண்ட காலம் எடுத்துக் கொண்டனர், இப்போது அவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும்!!!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் ஈரானும் "மிகவும் நல்லதொரு ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் உள்ளன" என்று செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியிருந்த நிலையில், புதன்கிழமை அவரது தொனி முற்றிலும் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan