ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்த ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்
கிழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமரிசையாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்று (26.08.2026) நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் தமிழர்களின் தனித்துவமான சைவ சமய வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரியங்களுடன் பல நூற்றாண்டுகளாக இந்தத் திருச்சடங்கு நடைபெற்று வருகின்றது. கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலயத்தின் திருச்சடங்குகள் 11 தினங்கள் வெகுவிமரிசையாக இடம்பெறவுள்ளன.
தீமிதிப்பு உற்சவம்
இந்தத் திருச்சடங்கில் அம்பாளின் முத்துச்சப்புர பவனி, வீரகம்பம் வெட்டுதல், நோற்புக்கட்டுதல், மகா சக்தி யாகம் உள்ளிட்ட பல்வேறு திருச்சடங்குகள் இடம்பெற்றன.

நேற்று ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, தெய்வாதீகர்கள் புடைசூழ தீக்குளி அமைக்கப்பட்டு, அதில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் “அரோகரா” கோஷத்துடன், தேவாதிகள் புடைசூழ தீமிதிப்பு உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்தத் தீமிதிப்பு உற்சவத்தில் இலங்கை மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.


