தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர் பதவி நீக்கம்! கருத்து தெரிவிக்க மறுத்த பவித்ரா
தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர், பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தொற்றுநோயியல் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர நீக்கப்பட்டமை குறித்து, இன்று செய்தியாளர்கள் கேட்டபோது, அமைச்சர் பவித்ரா எவ்வித பதிலும் அளிக்காமல் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ,கோவிட் -19 இறப்புகள் குறித்த தகவல்கள் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார்.
கோவிட் - 19 புள்ளிவிவரங்களை அறிந்த பின்னரே அரசாங்கம் முடிவுகளை எடுக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
தரவை வெளியிடுவதில் பொறுப்பற்றவராக இருப்பது கடுமையான குற்றமாகும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், துல்லியமற்ற கோவிட் -19 புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைக்கு பின்னால் ஒரு சதி இருக்கிறதா என்று கேட்டபோது, அது ஒரு சதி என்று நேரடியாக சொல்ல முடியாது என்று சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.