தேசிய மாநாட்டுக்குத் தயாராகுங்கள்! ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர்களிடம் தலைவர் டக்ளஸ் வேண்டுகோள்

Sri Lankan Tamils Tamils Douglas Devananda NPP Government
By Rakesh Jan 25, 2026 09:14 PM GMT
Report

தேசிய மாநாட்டை நடத்தி கட்சியை எழுச்சி கொள்ள வைப்பதற்குத் தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, "எம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை எதிர்காலம், நாம் நேசிக்கின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும்" என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமையகத்தில் இன்று(25) நடைபெற்ற கலந்துரையாடலில், அண்மையில் இடம்பெற்ற தன்னுடைய கைது மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுக்கு தெளிபடுத்தும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பறிபோகும் சிறீதரனின் பதவி! தமிழரசுக் கட்சியின் அதிரடி தீர்மானம்..

பறிபோகும் சிறீதரனின் பதவி! தமிழரசுக் கட்சியின் அதிரடி தீர்மானம்..

போதிய அரசியல் பலம் 

மேலும், மாற்றம் பற்றிய எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்கு இதுவரையில் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத நிலையே தொடருகின்ற போதிலும், பல்வேறு சவால்கள் மிகுந்த சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசுக்கு இன்னும் கால அவகாசம் வழக்க வேண்டும் என்பதே நியாயமான நிலைப்பாடாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மாநாட்டுக்குத் தயாராகுங்கள்! ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர்களிடம் தலைவர் டக்ளஸ் வேண்டுகோள் | Epdp Douglas Personally Appeals Party Members

"எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் ஏந்தி வந்து தாமாகத் தரப்போவதில்லை. எமது நண்லெண்ண சமிஞ்ஞையாலும் சிநேகபூர்வ உரையாடலாலும் தேசிய நல்லிணக்க வழிநின்றே நாமே எதையும் பெற வேண்டும். கடந்த கால அரசுகளும் நாம் கேட்டதற்கிணங்கவே பலவற்றுக்கும் தீர்வு தந்தார்கள். கடந்த காலங்களில் போதிய அரசியல் பலம் எமக்கு இருந்திருந்தால் முழுமையாக எதையும் பெற்றிருக்கலாம்.

கடந்த கால அரசுகளோடு நாம் ஆட்சிகளில் பங்கெடுத்திருந்தாலும் அவர்களோடும் எமக்கு முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் பேசித் தீர்ப்பதற்கு ஒரு தளம் இருந்தது. நாம் ஆட்சிகளில் பங்கெடுத்தமையே அந்தத் தளம்.

கடந்த கால அரசுகளைப் போலவே இந்த ஆட்சியோடும் எமக்கு முரண்பாடுகள் உள்ளன. ஆனாலும் எதிர்ப்பு அரசியல் நடத்துவோரைப் போல் நாமும் அரசைக் கடும்போக்கில் விமர்சிக்க முடியாது.

தமிழ் எம்.பிக்கள்

இந்த அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தரவில்லையென்றால் அதற்கு இந்த அரசு காரணம் என்று கூறிவிட முடியாது. கடந்த கால அரசுகளோடு நாம் எவ்வாறு கேட்டுப் பெற்றோமோ, அதுபோலவே இந்த அரசுடனும் பேசியே பெற வேண்டும்.

ஆளும் கட்சி சார்ந்த தமிழ் எம்.பிக்கள் அரசுக்குள் கரைந்தேபோயுள்ளனர். அவர்களுக்கு அந்த ஆற்றல் அனுபவம் அக்கறை கிடையாது.

தேசிய மாநாட்டுக்குத் தயாராகுங்கள்! ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர்களிடம் தலைவர் டக்ளஸ் வேண்டுகோள் | Epdp Douglas Personally Appeals Party Members

அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே ஆளும் கட்சி தமிழ் எம்.பிக்கள் தவிர்க்க முடியாமல் நிற்பார்கள். ஆகவே, நாமே அரசுடன் பேச வேண்டும். அதற்கு எமக்குப் பிரதிநித்துவம் இல்லை. அரசோடு பேச வல்ல அதிகாரம் இல்லை.

எதிர்காலத்தில் எமது மக்கள் அந்த ஆணையை வழங்கும் பட்சத்தில் இந்த அரசுடனும் நாம் எதையும் பேசித் தீர்க்கும் தளம் உருவாகும் என்று தெரிவித்தார்.

மேலும், கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி கட்சி கட்டமைப்புக்களை சீராக்குவதுடன் எங்களுடைய பலவீனங்களை அடையாளப்படுத்திச் சீர்செய்வதன் மூலம் கட்சியை எழுர்ச்சி கொள்ள வைக்க முடியும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US