இலங்கையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு நெருக்கடியை தீர்க்க புதிய கண்டுபிடிப்பு - பல பகுதிகளில் வெற்றி
இலங்கையில் சமையல் எரிவாயு பற்றாக்குறை நகர்ப்புற மக்களை மட்டுமல்ல, கிராமப்புற மக்களையும் கடுமையாக பாதித்துள்ள நிலையில் அதற்கு தீர்வு Save Our Sri Lanka என்ற அமைப்பினால் கண்டுபிடித்துள்ளது.
சந்தையில் இரண்டு வகையான எரிவாயு இருந்தாலும், பல பகுதிகளில் மக்கள் ஒரு வகை எரிவாயு சிலிண்டர்கள் கூட தங்கள் பகுதிகளில் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக, எரிவாயுவிற்கு பதிலாக சமையல் கழிவுகளிலிருந்து பயோகேஸை தயாரிக்கும் திட்டத்தை உனவட்டுன Save Our Sri Lanka அமைப்பு வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.
உணவுக் கழிவு
வீட்டுச் சமையலறைகளில் சேரும் உணவுக் கழிவுகளை அகற்றுவது இன்று நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு தரப்பினருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

வீதியோரங்களில் பொலித்தீன் பைகளில் வீசப்படும் இக்கழிவுகள் பெரும் தலைவலியாக மாறியுள்ளன.
இந்த நிலையில், குப்பை உட்பட அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளிலிருந்து பயோகேஸை உற்பத்தி செய்து, எரிவாயுவுக்கு பதிலாக அதைப் பயன்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டம் காலி மாவட்டத்தில் உள்ள யக்கலமுல்ல பிரதேச செயலகத்தில் உள்ள பல வீடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு
தற்போது அந்த வீடுகள் எரிவாயுவுக்கு பதிலாக பயோகேஸைப் பயன்படுத்துகின்றன.

“நான் சுமார் 40 வருடங்களாக இலங்கையில் இருக்கிறேன். நான் இப்போது உனவட்டுன பகுதியில் நிரந்தரமாக வசிக்கிறேன்.
இலங்கை மிகவும் அழகானது. மக்களும் மிகவும் நல்லவர்கள். ஆனால் குப்பைகளை அகற்றுவதில் மக்களுக்கு சிக்கல்கள் உள்ளன.
அதற்கு ஒரு தீர்வாக இந்த உயிரி எரிவாயுவை அறிமுகப்படுத்த முடிவு செய்தோம்” என Save Our Sri Lanka அமைப்பின் தலைவர் உலா மாஷ்பெர்கர் தெரிவித்துள்ளார்.
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam