உள்ளூர் மருந்து உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை
இலங்கையின் மருந்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையின் போது உள்நாட்டு மருந்து உற்பத்திகளுக்கு முதலிடம் வழங்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக உள்நாட்டு மருந்து உற்பத்திகளை கொள்வனவு செய்து, மருத்துவ விநியோகத் துறைக்கு வழங்கும் நடைமுறையை நிறுத்துமாறு இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

500 மில்லியனை சேமிக்கலாம்
உள்ளூர் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் 15 மருந்துகளை நேரடியாக கொள்வனவு செய்வதன் மூலம் வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களை விநியோகம் செய்யும் போது உற்பத்தியாளர்கள் மேலதிக செலவொன்றை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
அதன் காரணமாக குறித்த மருந்து வகைகளை கொள்வனவு செய்யும் போது, சுகாதார அமைச்சு அதிகப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri