வடக்கு கிழக்கில் உள்ள வெறும் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்க திட்டம்: முன்னாள் எம்பி மு.சந்திரகுமார்

Government Of Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Thevanthan Jul 28, 2025 11:15 AM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது என முன்னாள் எம்பி மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவரங்கில் 1983 கறுப்பு யூலையில் வெலிக்கடையில் சிறையில் படுகொலைப்பட்டவர்களின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,   1983 யூலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு நாள். அதற்கும் முன்னரும் இந்த நாட்டில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்பட்டு ஒடுக்கப்பட வேண்டும் என சிந்தனையில்தான் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால் அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர்தான் ஜே ஆர் . ஜெயவர்தன தான்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் கைது

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் கைது

தமிழர்களுக்கு பாதுகாப்பு 

அண்மையில் தொடருந்தில் ஒரு குழு சகோதாரத்துவ கோசத்தடன் வந்தனர். இதனை பார்த்த எனக்கு இப்பவும் நினைவில் இருக்கிறது அன்று தொடருந்தில் வந்த சிறில் மத்யூவின் காடையர்கள் குழு யாழ் நகரை அழித்தது. அன்று ஜே ஆர் சொன்னார் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொண்டவர்கள் ஜேவிபியினர் தான் என்று.

வடக்கு கிழக்கில் உள்ள வெறும் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்க திட்டம்: முன்னாள் எம்பி மு.சந்திரகுமார் | Empty Lands In North And East Sinhalese Settlement

ஆகவே நான் நினைக்கின்றேன். அன்று இருந்த அதே நிலைப்பாட்டில்தான் இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர். 1983 இற்கு பின்னர்தான் தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராகவும், அதன் இராணுவத்திற்கு எதிராகவும் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகரித்தது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அங்குதான் அவர்களுக்கு பாதுகாப்பு என உணர்த்தியதும்1983 தான். வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்த தமிழ் மக்கள் குறிப்பாக எதுவுமே அறியாத மலையக மக்கள் சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு கிழக்கு நோக்கி வந்தார்கள். அங்குதான் தமிழர்களுக்கு பாதுகாப்பு என கருதினார்கள்.

இந்த நிலைமைகள் தான் வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்த பல இயக்கங்களாக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் துரதிஸ்டவசம் இந்த போராட்டம் 2009 இல் மௌனித்துவிட்டது.

அல்லாஹ் மக்களுக்கு முன்பாக உருவாக்கி காட்டியுள்ள விடயம் - சுட்டிக்காட்டிய வைத்தியர் ஷாபி

அல்லாஹ் மக்களுக்கு முன்பாக உருவாக்கி காட்டியுள்ள விடயம் - சுட்டிக்காட்டிய வைத்தியர் ஷாபி

 தமிழ் அரசியலின் பலவீனம்

ஜனநாயக் போராட்டம் பின்னர் 30 வருட ஆயுத போராட்டம் அதற்கு பின்னராக இந்த15 வருட காலத்தில் நாம் பல அனுபவங்களை சந்தித்திருக்கின்றோம்.ஆனால் இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அதிலிருந்து முன்னேற போகின்றோமாக என்றால் அது சந்தேகத்திற்குரியதே. தமிழ் அரசியலின் பலவீனம் இதுதான். இனத்தின் நலன் கருத்தி நாம் ஒரணியில் இணைவது கிடையாது.

வடக்கு கிழக்கில் உள்ள வெறும் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்க திட்டம்: முன்னாள் எம்பி மு.சந்திரகுமார் | Empty Lands In North And East Sinhalese Settlement

அப்படி யாரேனும் இணைந்தால் அதனை எப்படி சீர்குலைக்கலாம் என சிலர் கங்கனம் கட்டிக்கொண்டு நிற்பார்கள். கடந்த கால போராட்ட வரலாறுகள் தெரியாத பலர்தான் இன்று புதிய வரலாறுகளை எழுதுகின்றார்கள். சிலர் கையில் கமரா இருந்தால் போதும் எதையும் எழுதலாம் என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

யாரும் யாரையும் துரோகி என முத்திரை குத்தி சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்கின்றார்கள். அதனை நம்பும் ஒரு பகுதியினரும் எங்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். தமிழ் தரப்பின் பலவீனத்தால் தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்றவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றார்கள். நாங்கள் ஒரு போதும் ஒத்த கருத்துடன் நிற்கபோவதில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இதனையே மூத்த ஊடகவியலாளர் தனபாலசிங்கமும்அகுறிப்பிட்டிருந்தார். ஒற்றுமையை குலைப்பவர்கள் எங்களுக்குள்தான் இருக்கின்றார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து தமிழ் மக்களின் நலன்கருத்தி தமிழ் மக்கள் கௌரவமாகவும், நிம்மதியாகவும் சுயாதீனமாகவும் வாழக்கூடிய சூழலை நோக்கி செல்ல வேண்டும்.

கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு!

கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு!

சிங்கள குடியேற்றங்கள்

இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய எங்கள் எல்லோருக்கும் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் சுயாட்சி அமைய வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது ஆனால் இனி அதற்கான சூழல் இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும் ஆயுத போராட்டத்தில் ஒரு சிறு கீறிலை கூட சந்திக்காதவர்கள் இன்று மற்றவர்களை துரோகி என்றார்கள்.

வடக்கு கிழக்கில் உள்ள வெறும் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்க திட்டம்: முன்னாள் எம்பி மு.சந்திரகுமார் | Empty Lands In North And East Sinhalese Settlement

ஏமாற்று அரசியலை செய்கின்றார்கள். இது தமிழ் மக்களுக்கு எந்தவித்திலும் விமோசனத்தை ஏற்படுத்தி தரப்போவதில்லை. தமிழர்கள் புலம் பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது.

இது ஆபத்தானது வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது. தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் தரப்பினர்கள் உண்மையாகவே அதற்கு எதிராகவே செயற்பட்டிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே நாம் அதாவது தமிழர் தரப்பில் மாற்றம் வேண்டும். நாம் யாதார்த்திற்கு ஏற்ப எங்களது செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே இன விடுதலைக்காக தங்களை இழந்த எங்களது மூத்த தலைவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான கடமையாகும் எனத் தெரிவித்தார்.

தடைகளை நீக்கி தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் - பெப்ரல் அமைப்பு

தடைகளை நீக்கி தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் - பெப்ரல் அமைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US