இஸ்ரேலில் வேலைவாய்ப்பு! அதிக பணம் வசூல்
வெளிநாட்டு வேலைகளுக்குத் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும்போது அவர்களிடம் பணம் வசூலிக்கும் மாபியாக்கள் அதிகளவில் செயற்படுகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இவ்வாறான மாபியாக்களில் நமது நாட்டவர் பலர் சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் ஒரு மாஃபியா செயல்படுகிறது. இஸ்ரேலிய வேலைகளுக்காக அதிக பணம் வசூலிக்கப்படுகிறது. எங்கள் மக்கள் இந்த மாஃபியாவை இஸ்ரேலில் இருந்து இயக்குகிறார்கள்.
மேலும், துபாய்க்கு சுற்றுலா விசா தருவதாகக் கூறி பணிக்கு அழைத்து வருகின்றனர். இதையெல்லாம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினம்.
பெறப்படும் புகார்கள் மீது இங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சிலர் மனிதக் கடத்தலுக்காக விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
மேலும், அந்த நாடுகளின் ஆதரவுடன் அவர்களை கைது செய்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆதரவு அளிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
