இஸ்ரேலில் வேலைவாய்ப்பு! அதிக பணம் வசூல்
வெளிநாட்டு வேலைகளுக்குத் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும்போது அவர்களிடம் பணம் வசூலிக்கும் மாபியாக்கள் அதிகளவில் செயற்படுகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இவ்வாறான மாபியாக்களில் நமது நாட்டவர் பலர் சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் ஒரு மாஃபியா செயல்படுகிறது. இஸ்ரேலிய வேலைகளுக்காக அதிக பணம் வசூலிக்கப்படுகிறது. எங்கள் மக்கள் இந்த மாஃபியாவை இஸ்ரேலில் இருந்து இயக்குகிறார்கள்.

மேலும், துபாய்க்கு சுற்றுலா விசா தருவதாகக் கூறி பணிக்கு அழைத்து வருகின்றனர். இதையெல்லாம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினம்.
பெறப்படும் புகார்கள் மீது இங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சிலர் மனிதக் கடத்தலுக்காக விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
மேலும், அந்த நாடுகளின் ஆதரவுடன் அவர்களை கைது செய்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆதரவு அளிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam