இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!
இந்த ஆண்டு 340,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று (23) நடைபெற்ற புதிதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''இந்த ஆண்டு 340,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிகளை பெற்ற சில நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
விதிமுறை
அத்தகைய நபர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தண்டனைகள் விதிக்கப்படும் 2024 ஆம் ஆண்டில், 311,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு குறித்த எண்ணிக்கையை 12% அதிகரிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டங்களை வகுத்துள்ளது.
அதன்படி, விதிமுறைகளை முறையாக நடைமுறைபடுத்திய பின்னர், மக்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
