ஊழியர் சேமலாப நிதிய பங்குதாரர்கள் அனைவருக்கும் பாதிப்பு! நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் கடன் மறுசீரமைப்பு காரணமாக பெருந்தோட்ட மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தின் பெறுமதி நீண்டகாலத்துக்கு குறைவடைகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த செயற்பாடானது பெருந்தோட்ட தொழிலாளர்களை பொறுத்தவரை இது பாரிய அநியாயமாகும். தோட்ட மக்கள் மாத்திரமல்ல ஊழியர் சேமலாப நிதியத்தின் பங்குதாரர்கள் அனைவருக்கும் பாதிப்பாகும்.
அத்துடன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர தேவையில்லை. அவ்வாறு நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர வேண்டும் என எந்த தேவையும் இல்லை.
ஆனால் அரசாங்கம் இதனை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து, அதற்கு வாக்கெடுப்பு நடத்தி, இறுதியாக, இது தொடர்பாக யாருக்கும் நீதிமன்றம் செல்ல முடியாது என சபாநாயகரின் கட்டளை ஒன்றையும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுதான் அரசாங்கத்தின் நோக்கம்.
அரசாங்கத்தின் திட்டமிட்ட வேலை
அரசாங்கத்துக்கு ஏதாவது பிரேரணை ஒன்றை கொண்டுவர தேவையெனில், அதனை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, அனுமதியை பெற்றுக்கொண்டு, யாராவது அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முற்படும்போது, அதனை தடுப்பதற்கு சிறுப்புரிமை பிரச்சினை ஒன்றை ஏழுப்பி, சபாநாயகரிடம் கட்டளை ஒன்றை பெற்றுக்கொள்வார்கள்.
இதுதான் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் தொடர்பில் இடம்பெற்றது. இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றிருக்கின்றன.
ஆனால் ஒருதடவை கூட இது தொடர்பான ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்ததில்லை. அதனால் அரசாங்கம் மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு செய்த பாரிய துராேகமாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியும் என்றால் அதற்குரிய உறுப்புரை என்ன? முடியுமானால் காட்டுங்கள். அதனால் அரசாங்கம் திட்டமிட்டே இதனை செய்தது. அதனால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இது பாரிய அடியாகும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
