ஊழியர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி! EPF தொடர்பில் சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள கருத்து

International Monetary Fund Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Economy of Sri Lanka employee provident fund
By Thulsi Jul 09, 2023 06:41 AM GMT
Report

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொருளாதார மீட்சிக்கு சிறந்த திட்டங்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மகரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி! EPF தொடர்பில் சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள கருத்து | Employee Provident Fund And Government

தூரநோக்கற்ற பொருளாதார முகாமைத்துவம்

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது. நாட்டின் கடன் நிலை மறுசீரமைக்கப்பட வேண்டும், கடன் நிலை நிலைபேறான தன்மையில் இல்லை என்பதை 2016 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு அறிவித்தேன்.

இருப்பினும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அப்போது அவதானம் செலுத்தப்படவில்லை.

2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ராஜபசர்களின் தூரநோக்கமற்ற பொருளாதார முகாமைத்துவ பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை. பொருளாதார பாதிப்புக்கு ராஜபசக்கள் நிச்சயம் பொறுப்புக் கூற வேண்டும்.

ஊழியர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி! EPF தொடர்பில் சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள கருத்து | Employee Provident Fund And Government

சர்வதேச பிணைமுறியாளர்

2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த எமது அரசாங்கம் அதிக வட்டி வீதத்துக்கு சர்வதேச பிணைமுறியாளர்களிடமிருந்துக் பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.

இருப்பினும் வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை. கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் தேசிய கடன் மறுசீரமைப்பை தவிர்க்க முடியாது. தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த திட்டங்கள் தவறானதாக உள்ளது.

ஊழியர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி! EPF தொடர்பில் சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள கருத்து | Employee Provident Fund And Government

2027 ஆம் ஆண்டு முதல் 2032 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி விநியோகித்துள்ள திறைசேரி உண்டியல்களை பிணமுறிகளாக மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்கும் போது மத்திய வங்கி ரூபா பெறுமதி அலகு நெருக்கடியை எதிர்கொள்ளும்.

செல்வந்தர்களுக்கு நிவாரணம் 

இந்த நிலையை முகாமைத்துவம் செய்ய ஒன்று நேரடி வரி அறவீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும். இந்த இரு தீர்மானங்களையும் அல்லது ஒன்றையேனும் நடைமுறைப்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஊழியர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி! EPF தொடர்பில் சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள கருத்து | Employee Provident Fund And Government

ஆகவே திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு சிறந்த திட்டங்கள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பரிந்துரைகளை அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் நிறைவுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US