கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! தயார் நிலையில் மீட்பு படையினர்
கொழும்பில் இன்று(16) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான காற்று, இடி மற்றும் மின்னுடனான மழை பெய்யக் கூடும் என்று எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து உடனடி நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
தயார் நிலையில் மீட்பு படையினர்
இதற்காக அவசரகால மீட்பு படையினர் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் படி, பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தற்காலிக மின்னல் மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
இதன்காரணமாக, பொதுமுக்கள் அவதானத்துடன் இருக்கவும், அவசர தேவைகளுக்கு உடனடியாக கொழும்பு மாநகர சபையைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால உதவிக்கு, 011-2422222 மற்றும் 011-2686087 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
