கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்
Sri Lanka
Sri Lanka Fisherman
Weather
By Dharu
a year ago
பல நாள் கடற்றொழில் படகுகள் உட்பட தொழிலுக்கு செல்லும் படகுகள் அனைத்தும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு இன்று(22.05.2024) கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த(Sushantha Kahavatta) இதனைத் தெரிவித்துள்ளார்.
மழை மற்றும் பலத்த காற்று
அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து,திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அத்துடன், தற்போது கடற்றொழிலுக்கு சென்றுள்ள பல நாள் கடற்றொழில் படகுகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US