சிறுவர்களிடையே வேகமாக பரவும் நோய் தொற்றுக்கள்! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
இலங்கை சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை
காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறார்களின் கை, கால் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தளும்புகள் அல்லது வௌ்ளை நிற கொப்புளங்கள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும், 6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கொப்புளங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுமாயின் பிள்ளைகளை வெளி இடங்களுக்கு அனுப்பாது சில நாட்கள் வரை வீடுகளில் வைத்திருக்குமாறும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
