எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பற்றி நாளை அவசர ஆலோசனை உப குழுக்கூட்டம்
எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு அவசர ஆலோசனை உப குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardana) சபையில் அறிவிப்பை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa), எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு தொடர்பில் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம்(Lasantha Alagiyawanna) கேள்விகளை எழுப்பினார்.
இதற்குக் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பதிலளித்த நிலையில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவசர ஆலோசனை உப குழுக் கூட்டத்தைக் கூட்டிடலாம் என்ற யோசனை சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவால் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்தே எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு அவசர ஆலோசனை உப குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் அறிவித்ததுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் அவசர ஆலோசனை உப தெரிவுக்குச்
செயற்குழு ஒன்றையும் அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
கோரிக்கை விடுத்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022