ஆற்றில் கவிழ்ந்த கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு ஏற்பட்ட சோகம்..!
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டாம் தூண் பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின் கிளை ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவர்களில் ஒருவர் உப பொலிஸ் பரிசோதகர் மற்றொருவர் விமானப்படை வீரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan