வாகன இறக்குமதியில் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கான சலுகை
வாகன இறக்குமதிக்கான அனுமதியை பெறுவதற்கு 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெற்ற அரசு மற்றும் நீதித்துறை உயர் அதிகாரிகளும் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"2022இல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய ஓய்வு வயதை 60ஆகக் குறைத்ததற்கமைய 60 வயதை நிறைவு செய்து ஓய்வு பெற்ற அதிகாரிகளும் வாகன அனுமதி பெறத் தகுதியுடையவர்கள்.
அமைச்சரவையின் தீர்மானம்
அது மாத்திரமன்றி, நீடிப்பு இல்லாமல் கட்டாய ஓய்வுக்கு அனுப்பப்பட்டவர்களும் சலுகை கட்டண விகிதங்களின் கீழ் அனுமதி பெறலாம்.

மேலும், கடந்த மார்ச் 11ஆம் திகதியன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்தே ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகளுக்கு வாகன இறக்குமதி அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam