அமெரிக்காவில் நிலஅதிர்வின் போது யானை குட்டியை காப்பாற்ற விரைந்த யானைகள்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் இன்று பாரிய நிலநடுக்கம் இன்று ஏற்பட்டிருந்தது.
இதன்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலை சஃபாரி பூங்காவில் ஆப்பிரிக்க யானைகளின் கூட்டம் தங்கள் குட்டிகளை பாதுகாக்க செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிலஅதிர்வை உணர்ந்த யானைக் கூட்டத்தின் மூத்த யானைகள் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, கூட்டமாக தங்கள் குட்டிகளை சூழ்ந்து பாதுகாப்பு அரணாக நின்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
Stronger together 🐘
— San Diego Zoo Wildlife Alliance (@sandiegozoo) April 14, 2025
Elephants have the unique ability to feel sounds through their feet and formed an "alert circle" during the 5.2 magnitude earthquake that shook Southern California this morning. This behavior is a natural response to perceived threats to protect the herd. pic.twitter.com/LqavOKHt6k
இணையத்தில் பரவி வரும் காட்சி
இணையத்தில் பரவி வரும் இந்த காட்சிகளில், “காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டு, அவை முதலில் சிதறி, பின்னர் விரைவாக மீண்டும் ஒன்றுகூடி, ஜூலி மற்றும் மக்யா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளை மூத்த தாய்மார்களான நட்லுலா, உமங்கானி மற்றும் கோசி ஆகியவை சூழ்ந்து நிற்கின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் நின்ற பிறகும், வயது வந்த யானைகள் தங்கள் பாதுகாப்பு வலயத்தை கலைக்காமல் காதுகளை விரித்து, எச்சரிக்கையாக, பல நிமிடங்கள் அப்படையே நின்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
