மயிரிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி (Video)
சுற்றுலா சென்ற இளைஞர்கள் குழுவொன்று கண்டி ஏரியை பார்வையிட சென்ற போது காட்டு யானையிடம் சிக்கி மயிரிழையில் உயிர்தப்பிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் சந்தி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று கண்டி ஏரியை பார்வையிட வந்துள்ளனர்.
இளைஞர் குழு மகிந்த ஆரம்ப பாடசாலைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது காட்டு யானையொன்று திடீரென இளைஞர்களை துரத்தியுள்ளது.

இதன்போது இளைஞர்கள் அருகில் இருந்த மரத்தில் ஏறி தனது உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளதுடன், யானை அந்த இடத்தில் மிகவும் பதற்றமாக நடந்துகொண்ட விதத்தினையும் காணொளி எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சில மணி நேரத்தின் பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றதையடுத்து, இளைஞர்கள் மரத்தில் இருந்து இறங்கி உயிரைக் காப்பாற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan