யாழ். வட பத்திரகாளி ஆலயத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம்

Jaffna Hinduism
By Shadhu Shanker May 11, 2025 06:18 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

கடந்த 07.05.2025 அன்று யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள வட பத்திரகாளி கோவிலின் இரவு நேர திரு மஞ்சத்திருவிழாவின் போது உபயகாரர்களினால் யானை கொண்டுவரப்படிருந்தது.

இதன் போது மிகச் சத்தமாக வான வெடிகள் வெடிக்கப்பட்டு தாவடியூர் மட்டுமல்லாது அருகிலிருந்த ஊர்களும் அதிர்ந்தது.அது மட்டுமல்லாது செண்டி மேளம். தீப்பந்தம் சுற்றுதல் போன்ற இதர நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.

ஐம்பதிற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய தம்முடன் சிறையில் வைத்திருந்த அங்கீகரிக்கப்படாத பொருட்கள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய தம்முடன் சிறையில் வைத்திருந்த அங்கீகரிக்கப்படாத பொருட்கள்

சிகிச்சைக்காக அனுமதி

இந்த கேளிக்கை நிகழ்வுகளைப் பார்ப்பதற்கென அருகிலுள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தமையால் கோவிலில் வழமைக்கு மாறாக சன நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.

அதேவேளை யானைகளுடன் படம் எடுப்பதற்கு அனுமதிக்கப் பட்டிருந்தமையினால் பலரும் யானைகளுடன் நின்று படமும் எடுத்துள்ளனர். தொடர்ச்சியான வெடிச் சத்தம் மற்றும் தீப்பந்த விளையாட்டினால் யானை மிரண்டுள்ளது.

யாழ். வட பத்திரகாளி ஆலயத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் | Elephant Attack In Jaffna Temple

இதன் போது அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தும்பிக்கையினால் நெஞ்சில் தாக்கியுள்ளது.அத்தோடு அதே பெண்ணூக்கு காலினால் தொடைப்பகுதியில் தாக்கியுள்ளது.

குறித்த பெண் தொடை எலும்பு பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அந்த தாயின் நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் பிள்ளை யானையுடன் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியுடன் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட தில் முகம் உட்பட உடலின் பல பகுதியில் கடுமையான உரோஞ்சல் காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.

இவ்வாறு யானை செல்கையில் இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது பிள்ளைகளை யானை தாக்கிவிடும் என்ற அச்சத்தில் அவர்களை இழுத்துவிட்டு அவர் நிலத்தில் விழுந்துள்ளார்.

இதன் போது யானையும் கீழே விழுந்து குறித்த தாயின் முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடையில் தனது முழங்காலை ஊன்றி எழும்பியதில் அத்தாயின் கால் பகுதி சிதைவடைந்துள்ளது.

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி! புலம்பெயர் கனேடிய அமைச்சர் உருக்கம்

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி! புலம்பெயர் கனேடிய அமைச்சர் உருக்கம்

யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை

குறித்த தாயும் கணவரும் 20 நிமிடங்களுக்கு மேலாக துடித்த போதும் யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை.

பின்னர் சில நல்ல எண்ணம் கொண்ட இளைஞர்களால் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முழங்காலுக்கு கீழ்ப் பகுதி அகற்றப்பட்டு மற்றைய கால் பாதத்திலும் பலத்த காயப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் இந்த நிகழ்வின் போது உடனடியாக ஆலய நிர்வாகமோ, உபயகாரரோ குறித்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. அதன் பின்னர் கூட சம்மந்தப்பட்ட உபயகாரரோ ஆலய நிர்வாகமோ இதுவரை குறித்த பெண்களை தொடர்புகொள்ளவில்லை.மாறாக உபயகாரர் சார்பாக 15 இற்கு மேற்பட்டோர் வைத்திய சாலைக்கு வந்து சென்றுள்ளனர்.

யாழ். வட பத்திரகாளி ஆலயத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் | Elephant Attack In Jaffna Temple

அத்தோடு இது தொடர்பாக செய்திகளை எழுதுபவர்களுக்கு மிரட்டும் பாணியில் இவர்களது நடவடிக்கை அமைந்துள்ளது.

ஒரு யானை ஆலயத்திற்கு அழைத்துவருகிறார்கள் எனின் அதற்கேற்ற முறையான முற்பாதுகாப்பு நடவடிக்கை அனைத்தையும் ஆலய நிர்வாகமும் உபயகாரரும் மேற்கொண்டிருக்க வேண்டும்.

வெறுமனே பொலிஸ் பாதுகாப்பு மட்டும் போதுமா? தீ அணைப்புவண்டி, அம்புலன்ஸ் வண்டி எங்கே? யானைகள் முறைப்படி சட்ட ரீதியாக அனுமதி பெற்று கொண்டுவரப்பட்டதா? முதலுதவிக்காண என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததா? யானையின் இயல்பு சனப்பொழுதில் மாறக்கூடியது.

அன்றையதினம் யானை மதங்கொண்டிருந்தால், நிலைமை என்ன ஆகியிருக்கும் யானையை அடக்கக் கூடிய வல்லமை பொலிஸாருக்கு உண்டா? அல்லது அவர்கள் அதற்கான பயிற்சி பெற்றவர்களா? இவர்கள் பணபலம், அதிகார பலம், ஆட்பலம் உள்ளவர்கள் ஆகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு மூலம் கொடுப்பதற்கே பயப்படுகின்றனர்.

உபயகாரரின் கடந்த கால செயற்பாடுகள் அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்வதற்கு மக்கள் பயப்படுகின்றமைக்கான காரணம் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான தீர்வை காலம் தான் பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US