இலங்கையில் யானைக்கு நேர்ந்த கொடுமை!தாய்லாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை
தாய்லாந்தினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட சக் சுரின் என்ற யானையை மீளப் பெறுவதற்கான வழிகளை தாய்லாந்து அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யானையின் நிலைமை
குறித்த யானையை கையாளுபவர்கள் அதனை தவறாக நடத்துவதாக விலங்குகள் உரிமைகள் அமைப்பினால் கடந்த ஆண்டு அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்தே யானையை மீளப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை இலங்கைக்கு பரிசளிக்கப்பட்டதிலிருந்து அதன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதன் பின்னர், சக் சுரின் பல இடங்களுக்கு கை மாறியுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சமீப காலம் வரை, குறித்த யானை அளுத்கம கந்தே விகாரையில் வசித்து வந்தது.
இலங்கையின் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான Rally for Animal Rights and Environment (ரேர்) கூற்றுப்படி, விகாரையில் யானையின் உடல் சங்கிலியால் கட்டுப்படுத்தப்பட்டதால், அதன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தது.
கடந்த ஆண்டு இறுதியில், சக் சுரினை அவசர மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லுமாறு அந்நாட்டு அரசாங்கத்தை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சக் சுரின் யானையின் நிலைமையை அறிந்திருந்தாலும் அதனை தாய்லாந்திற்கு கொண்டு செல்வது, அதன் அளவு மற்றும் அதனுடைய காயங்களின் தன்மை காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசாங்கத்தின் தகவல்
இது தொடர்பில் தாய்லாந்து சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா தெரிவிக்கையில்,“சாக் சுரினை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு C-130 போக்குவரத்து விமானத்தைப் பயன்படுத்துவதே ஆரம்பத் திட்டம்.
இருப்பினும் ஆயுதங்கள் மற்றும் தாங்கிகள் போன்ற இராணுவ தளவாடங்களை கொண்டு செல்வதற்காக முதலில் வடிவமைக்கப்பட்ட விமானத்தில், யானையை அடைக்க பொருந்தாது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன் இந்த யோசனை கைவிடப்பட்டது.
இதனையடுத்து சக் சுரினை மீட்டெடுக்க ஒரு கப்பலை அனுப்பும் திட்டத்தை தாய்லாந்து அரசாங்கம் முன்மொழிந்தது.
எனினும் காயப்பட்ட யானைக்கு இரண்டு வார பயணம் மிக நீண்டதாக இருக்கும் என்பதால் இதுவும் பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது.
சக் சுரின் நாடு திரும்புவதற்கு பொருத்தமான தீர்வைக் காண அமைச்சு தற்போது வெளிவிவகார அமைச்சுடன் ஒத்துழைத்து வருகின்றது.”என தெரிவித்துள்ளார்.
மேலும் 2001 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் இலங்கைக்கு பரிசாக மூன்று யானைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
