இலங்கை எம்.பிக்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய வசதி!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களை ஒரு திட்டத்தின் கீழ் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தில் குறித்த மின்னணு உபகரணங்களை பயன்படுத்துவதற்கும் உரிமையளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொருட்களின் மதிப்பு
நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்திற்கு கணினிகள், நகல் இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள் மற்றும் மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பொருட்களின் மதிப்பு வாங்கிய பிறகு தவணை அடிப்படையில் வசூலிக்கப்படும் எனவும் பணம் வசூலிக்கப்பட்ட பிறகு, பொருட்களின் உரிமை நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த நோக்கத்திற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலத்தில் 800,000 ரூபாய் ஒதுக்க அந்த அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா... கொந்தளிக்கும் சர்வதேச அமைப்புகள் News Lankasri
