இந்தியாவின் உதவியுடன் நாடாளுமன்றத்திற்கு மின்சாரம்
நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்ன ஓயாவை கேந்திரமாக கொண்டு முதலாவது மிதக்கும் சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு தினமும் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மிதக்கும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த சூரிய ஒளிமின்சார உற்பத்தி நிலையத்தின் மூலம் 1.5 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆய்வு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்கான நிதியை இந்திய அரசாங்கம் வழங்க உள்ளது எனவும் அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.