மின் கட்டண அதிகரிப்பு! முறைபாடின்றி தலையிட தயார்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் முறைப்பாடு இன்றி தலையிடத் தயாராகவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், அது தொடர்பில் முறைப்பாடு இன்றி தலையிடத் தயாராகவுள்ளோம்.
மக்களுக்கு நெருக்கடி
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கனவே சுமையுடன் இருக்கும் மக்களை மேலும் ஒடுக்குவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது அதன் பங்குதாரர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை.
அதன்படி, ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும்.” என தெரிவித்துள்ளார்.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
