இலங்கையில் மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் தற்போது மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலை சீர்செய்ய இன்னும் மூன்று மணித்தியாலங்கள் தேவை என்று மின்சார சபையின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த தடைக்கு மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மின்சார உற்பத்தி மையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்கள், கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.
எனினும் கட்டமைப்புகளில் சேவையாற்றும் பொறியியலாளர்கள் அட்டவணையின்படி பணியாற்றுவதாகவும் அந்த சங்கம் தெரிவித்திருந்தது..
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri