மின் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு - கிடைக்கப்போகும் சலுகை
90 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (07.04.2026) உரையாற்றிய போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது இந்தச் சலுகை வழங்கப்படும்.
அடுத்த 3 மாதங்களுக்கான செலவு
அடுத்த மூன்று மாதங்களுக்கான செலவை அரசாங்கமே ஏற்கும். எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சார உற்பத்திக்கு அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam