நாட்டு மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி: அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் அதிகரிப்பு
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபா செலவிடப்படுகின்றது. ஆனால் நாங்கள் ஒரு அலகுக்கு 29 ரூபாய் மாத்திரமே வசூலிக்கின்றோம். இதனால் பெரும் நஷ்டத்தை அடைகின்றோம்.
எங்களுக்கு தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் உலை எண்ணையை யாரும் இலவசமாக வழங்கவில்லை. மேலும் எரிபொருள் விலையில் முடிவு எடுக்கப்படாததால் நாங்கள் நஷ்டம் அடைகிறோம்.
எனவே ஜனாதிபதியோ, நிதியமைச்சரோ அல்லது அரசாங்கமோ யார் வந்தாலும், இனி கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
