மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
மின் கட்டணங்கள் தொடர்பான சமீபத்திய தரவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மின்சார சபை மேற்கொண்ட அனுமானங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம்
செப்டம்பர் மாதத்திற்கு நாளொன்றுக்கு 44.70 ஜிகாவோட் மணிநேர மின் தேவை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டாலும், உண்மையான தேவை 41.01 ஜிகாவோட் மணிநேரம் என்று அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் நிலக்கரியின் விலை 68.60 ரூபாவிலிருந்து 52.60 ரூபாவாக குறைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, மின்சார சபை சமர்ப்பித்துள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள கோரிக்கையை குறைந்தபட்ச தரவுகளை கொண்டு உறுதிப்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
