மாற்றுத்திறனாளி ஒருவரின் வாக்கை தவறாக பதிவிட்ட தேர்தல் அலுவலர்!
மாற்றுத்திறனாளி ஒருவர் தனது வாக்கை தொலைபேசி சின்னத்துக்கு புள்ளடியிடுமாறு கோரிய நிலையில், தேர்தல் அலுவலர் வேண்டுமென்றே திசைகாட்டிக்கு புள்ளடியிட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அநுராதபுரம், கஹடகஸ்திகிலிய முஸ்லிம் வாக்குச் சாவடியிலேயே இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது.
அங்கு வாக்களிக்க வந்த ஒரு மாற்றுத்திறனாளி, தனக்கு சுயமாக வாக்களிக்க முடியாத நிலையில் உதவியாளர் ஒருவரின் துணையை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
முறைகேடு
அதன்போது வாக்குச் சாவடியில் கடமையில் இருந்த அலுவலர் ஒருவர் குறித்த மாற்றுத்திறனாளிக்கு ஒத்தாசை செய்ய முன்வந்துள்ளார்.

எனினும் வாக்காளர் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்கு புள்ளடியிடச் சொன்ன போது அதற்குப் பதிலாக தேர்தல் அலுவலர் தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டிக்கு புள்ளடியிட்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட வாக்காளரின் முறைப்பாட்டின் பேரில் அவருக்கு புதிய வாக்குச் சீட்டு வழங்கப்பட்டு, அவர் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri