உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எந்த வகையிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என்று நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு இந்த முடிவு, ஒரு சோதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை துறந்து, திவாலானதாக அறிவிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறியதிலிருந்து, நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் கருத்துக்கான ஆய்வு நடத்தப்படவில்லை.
முக்கிய போட்டி நிலவலாம்...
எனினும், தேசிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள பத்திகளின்படி,
ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில், முக்கிய போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த இரண்டு கட்சிகளும் தற்போதே களத்தில் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை, தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 10ஆம்
திகதியன்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிய பின்னரே, ஏனைய கட்சிகளும்
தேர்தலுக்கான தயாரிப்புக்களில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.