மகிந்தவின் சலூன் வாசல் திறந்துள்ளது - நாமல் விடுத்துள்ள அழைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மீண்டும் வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் சலூன் கதவு வழியாக கட்சிக்கு வரவும் முடியும் அங்கிருந்து செல்லவும் முடியும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ரணில் - பசில் முறுகல்
பசில் ராஜபக்ஷ, எஸ்.எம்.சந்திரசேனவுக்காக நிபந்தனையின்றி குரல் கொடுத்ததாகவும், தான் விரும்பிய பதவிகளை வழங்குவதற்காக அவர் போராடியதன் விளைவாக ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாகவும் நாமல் தெரிவித்தார்.

அன்று, எஸ்.எம். சந்திரசேனவுக்கான அமைச்சு பதவியை பெற, பசில் ராஜபக்ஷ நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஏதாவது மனக்கசப்பு இருந்தால் அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
சந்திரசேனவிற்கு பதவிகளை வழங்குவதற்காக நாங்கள் போராடியதும் ரணிலுடன் ஏற்பட்ட முரண்பாட்டிற்கு காரணமாக மாறியதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam