இலங்கையில் தீவிர நெருக்கடி நிலை! தீர்வு ஒன்றுதான் : ஹர்ஷ
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இறுதித் தெரிவு தேர்தல் மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்றே தீர்வு

தற்போது ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கு தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
தீர்வாக சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும், அதன் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதிப் பிரச்சினை காரணமாக பலர் தேர்தலுக்கு இடையூறு விளைவித்தனர்.இந்த ஆண்டு அக்குரேகொட பாதுகாப்பு கட்டிடத்திற்கு மாத்திரம் 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இது வழக்கமாக தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். எனவே, இந்தப் பிரச்சினை நிதியுதவியுடன் தொடர்புடையது அல்ல. ஆனால் இலங்கையின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்கான வழி இது என்றும் அவர் தெரிவித்தார்.
தோல்வியடைந்தது கோட்டாபய அரசு

இந்த அரசாங்கம் முழுத் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியுமென நம்ப முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam