மட்டக்களப்பில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு (Photos)
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்ட மூலத்தில், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் (04.03.2023) மட்டக்களப்பு, காத்தான்குடியில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் எம்.என்.விக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
மேலும், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்ட மூலத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறிச் செயற்படும் வேட்பாளர்களின் பதவியைப் பறிக்கும்
அதிகாரம் இந்த சட்டத்திற்குள்ளது.
தேர்தல் செலவினங்கள் தொடர்பில் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலுக்கு மாறாகச் செலவு செய்யும் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், பொதுமக்கள் இந்த நேரத்தில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து இதன்போது அறிவித்தல்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், தற்போது உள்ளுராட்சிமன்ற தேர்தல் காலம் என்ற காரணத்தினால் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த சட்ட மூலத்தினை சரியாக பின்பற்றுகின்றார்களா என்பதை பொதுமக்கள் கண்காணிப்பதற்காக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் நடந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து கருத்துரைகளும் நடைபெற்றதுடன், வீதி நாடகங்களும் நடைபெற்றுள்ளன.
இந்த நிகழ்வில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் மட்டக்களப்பு
மாவட்ட இணைப்பாளர் சிராணி தேவகுமார் உட்பட பலர் கலந்துகொண்மை குறிப்பிடத்தக்கது.











