நிறுத்தப்பட்ட மானியங்களை மீள வழங்க முன்வந்த தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலின் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெரும்போக பருவத்திற்கான உர மானியம், கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம், ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை மீள வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, குறித்த மானியங்கள் செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையுடன், ஒக்டோபரில் வழங்கப்படவுள்ளன.
ஒப்புதல் பெறல்
எனினும், கூடுதலாக, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஒப்புதல் பெற வேண்டியதன் அவசியத்தை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது அரச சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam