அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இதன்படி, பதிவு செய்யப்பட்டுள்ள 80 அரசியல் கட்சிகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழு தலைவரை அடுத்த வாரம் சந்திக்க உள்ளனர்.

வாக்காளர் பதிவு தொடர்பிலான பிரச்சினைகள்
இந்த ஆண்டு ஒக்டோம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டியுள்ளது.

மேலும், தேர்தல்கள், வாக்காளர் பதிவு தொடர்பிலான பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்த சந்திப்பு இம்மாதம் 27 ஆம் திகதி அல்லது மார்ச் மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam