இடைநிறுத்திய நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு அனுமதி
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்ட நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு, முதியோர் நலனோம்புகைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்ற போதும், தேர்தல் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
தேர்தல் ஆணைக்குழு
இந்நிலையில், குறித்த திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்துவதில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடாத நிலையிலும், அநுரகுமார தற்போது ஜனாதிபதியாக இருப்பதன் காரணமாக குறித்த திட்டங்கள் அவருக்கு தேர்தலில் தனிப்பட்ட செல்வாக்கை அதிகரிக்க உதவாது என்ற ரீதியிலும் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
