தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு
தேர்தல் ஆணைக்கழு அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பில் பங்கேற்றதன் பின்னர் அவர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு மிக மந்த கதியில் செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் வெற்றியீட்டும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என ஜனாதிபதி கூறிய விடயம் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் பிரசார கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணைக்குழுவும் உரிய நிறுவனங்களும் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்வதாகத் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு அரச துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக சம்பிக் ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பாதாள உலகக் குழு செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
