மன்னாரில் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வயோதிபர் மரணம்
மன்னாரில் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமடைந்த வயோதிபர் ஒருவர் மீண்டும் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் மன்னாரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் கடமையாற்றிய 86 வயதுடைய வயோதிபர் எனத் தெரிய வந்துள்ளது.
குறித்த வயோதிபருக்கு ஏற்கனவே கோவிட் தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டநிலையில் குறித்த வயோதிபர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் வீடுதிரும்பியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வயோதிபருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுக் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri