தீவிர வானிலையின் அபாய மண்டலத்தில் உலகம்! இவ்வாண்டின் இறுதியில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வெளிவந்துள்ள தகவல்
எல் நினோ உறுதியாக நிலைபெற்றுள்ளதுடன், எதிர்வரும் மாதங்களில் மிகவும் வலுவான நிகழ்வாக தீவிரமடையும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் (World Meteorological Organization - WMO) அறிவித்துள்ளது.
இது மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளில் பெரும் தாக்கங்களையும், அதனுடன் தொடர்புடைய வெள்ளம், வறட்சி மற்றும் கடும் வெப்பம் போன்ற அபாயங்களையும் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான அறிவிப்பில் மேலும், எல் - நினோ எதிர்வரும் பெப்ரவரி வரை நீடிப்பதற்கு கிட்டத்தட்ட 100% அசாதாரணமான உயர் நிகழ்தகவு இருப்பதைக் குறிப்பிடுகின்றன. எல் - நினோ அறிவிப்பு இவ்வளவு சந்தேகத்திற்கு இடமின்றி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
அசாதாரணமான வெப்பம்
வெப்பமண்டல பசிபிக் பகுதியில் நிலவும் அசாதாரணமான வெப்பமான கடல் சூழல்களால் உந்தப்பட்டு, எல் - நினோ வரும் மாதங்களில் மேலும் வலுப்பெற்று, இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காலநிலை தாக்கங்கள் 2027ஆம் ஆண்டு வரையிலும் தொடரும். எல் நினோ நம் கண் முன்னே பிரம்மாண்டமாகி வருகிறது.
இந்த பூமி இதுவரை கண்டிராத ஒரு சூழலில் உள்ளது, மேலும் நீர்நிலைகள் வெப்பமடைந்து வருகின்றன. கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்து வருகிறது, வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் தீவிர வானிலையின் அபாய மண்டலத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - அமல்