இந்தியாவில் இருந்து இலங்கை வரும் முட்டையால் ஆபத்து
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதியை ஏற்றிச் வரும் கப்பல் நாளை நாட்டிற்கு வரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதில் 20 லட்சம் முட்டைகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதுவரை இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார்.
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தும் போது, கையுறைகளை பயன்படுத்த வேண்டும் மற்றும் முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் அல்லது அழிக்க வேண்டும். மீதமுள்ள முட்டை ஓடுகளை சுற்றுச்சூழலில் வெளியிடக்கூடாது.
பல நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam