கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதியால் பயணிகளுக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பயணிகளின் வசதி கருதி அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதி முறையான வகையில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முனையங்களில் கடவுச்சீட்டுகளை சரியாக ஸ்கேன் செய்யத் தவறியதால் வருகை முனையத்தில் நீண்ட வரிசைகளும் தாமதங்களும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிறுவனங்கள்
பயணிகளின் விபரங்களை முன்கூட்டியே சரியாக முறையில் விமான நிறுவனங்கள் பதிவேற்றமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகள் உரிய நேரத்தில் கிடைக்காததால், பல பயணிகள் e-gates மூலம் செல்ல முடியாமல் மீண்டும் பழையபடி கைகளால் சரிபார்க்கும் இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இதுவரை சுமார் 20,000 கடவுச்சீட்டுகள் இந்த முறைமையூடாக சோதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்பகட்டத் தொழில்நுட்பக் கோளாறுகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் உறுதியளித்துள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri