விடுதலை கோரி தீக்குளித்த ஈழத் தமிழர் ஆபத்தான நிலையில்..!
தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தம்மை விடுதலை செய்யக்கோரி நீண்ட நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம்(24) ஒருவர் தீக்குளித்துள்ளார்.
இதேவேளை பலர் உயர்ந்த மரங்களில் ஏறி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தவறான முடிவு
தீக்குளித்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈழத் தமிழர்கள் தம்மை விடுதலை செய்யக்கோரி 103 ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் மூவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கை
மேலும் விடுதலை செய்யுங்கள் அல்லது தர்ம கொலை செய்யுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தாம் இறந்துவிட்டால் தமது உறுப்புக்களை தமிழக மக்களுக்கு
தானமளிக்கவும் ஒப்பந்தமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.