மலையகத்தில் தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் செயலமர்வு
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மலையகத்தில் மூன்று நாள் கல்விச் செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த கல்விச் செயலமர்வானது இன்று (27) ஆரம்பமாகியுள்ளதுடன் நாளை மற்றும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.
செயலமர்வு
மலையகம் பண்டாரவளை வலயத்திற்கு உட்பட்ட பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி, கிரேக் ஸ்ரீ சக்தி கல்லூரி ஆகிய பாடசாலைகளிலுள்ள 175 மாணவர்களுக்கே தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான கல்விச் செயலமர்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் ஆரம்பித்து வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |