வாக்குகளை மீண்டும் எண்ணுங்கள்! முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு
அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
கோரிக்கை
கல்முனையில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் அவர் தமது முறைப்பாட்டை நேற்று(10.12.2024) முன்வைத்துள்ளார்.
இதன்போது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்திற் கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

37,000 அடியில் பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: நிர்வாணமாக நடனமாடிய ஊழியரால் பரபரப்பு News Lankasri

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
