பாடசாலை கட்டணத்தை 50% அதிகரிக்க முடிவு......! கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
50% கட்டணத்தை அதிகரிக்க பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு அவ்வாறான தீர்மானத்தை வழங்கவில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற அதிபர் சேவையின் தரம் iii க்கு 4672 புதிய அதிபர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை வெற்றிடங்கள்
அத்துடன், கல்வித்துறையில் தற்போதுள்ள வெற்றிடங்களை தொடர்ச்சியாகவும் முறையாகவும் பேணுவதற்கு அவற்றை நிரப்புவது அவசியமானது.

தற்போது கல்வி நிர்வாக சேவையில் 808 வெற்றிடங்கள் காணப்படுவதுடன் 50 வீதத்தை பூர்த்தி செய்வதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி 404 காலி பணியிடங்கள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
50% கட்டணத்தை அதிகரிக்க பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு அவ்வாறான தீர்மானத்தை எதனையும் வழங்கவில்லை எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam