வாக்களிக்கும் முறை தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகள்
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.
இச்செயலமர்வானது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (30.10.2024) யாழ். மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தியோகத்தர்கள்
இதன்போது, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி மக்களுக்கு தெளிவூட்டல் செயற்பாடுகளில் ஈடுபடுபடவுள்ள, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உதவி பிரதேச செயலாளர்கள், நிர்வாக கிராம அலுவலர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு தெளிவூட்டப்பட்டது.
மேலும், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ்ஜால் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
