மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் காலமானார்
மூத்த ஊடகவியலாளரும், பத்திரிகை ஆசிரியருமான ம.வ.கானமயில்நாதன் தனது 79ஆவது வயதில் இன்று காலமானார்.
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ம.வ.கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.
நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்திலிருந்து ஊடகப் பணியாற்றிய மிகச் சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் இவரும் ஒருவர்.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளை ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியாகச் சூழலில் அர்ப்பணிப்புடன்
கடமையாற்றியமைக்காக கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி யாழ். ஊடக
அமையத்தினால் அவர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri