கொழும்பில் வெடித்தது வன்முறை - ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மகா சங்கத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.
அத்துடன், அமைதியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.
பௌத்த தேரர்கள் மற்றும் அருட்தந்தையர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தூண்டப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்த நிலையில், பல மில்லியன் ரூபா பெறுமதியாக வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிதரமர் பதவியிலிருந்து விலகுவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். வன்முறையை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
