கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்ட கலாநிதி செ.அரசரெத்தினம்
மட்டக்களப்பு துறைநீலாவணையினைச் சேர்ந்த கலாநிதி செ. அரசரெத்தினம் கிழக்கு பல்கலைகழகத்தின் இரசாயனத்துறையில் பேராசிரியராக பதவி உயர்வுபெற்றுள்ளார்.
பல்கலைக்கழக பேரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் 26.11. 2022 அன்று கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் வி. கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
பேரவை அனுமதி
இப்பேரவைக் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி செ. அரசரெத்தினத்தின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள், நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது இரசாயனவியல் துறை சிறப்புப் பட்டதாரி
அவற்றின் அடிப்படையிலேயே இவர் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் துறைநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி ஆகியவற்றினை துறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும், உயர்கல்வியினை கல்முனை பாற்றிமா தேசிய பாடசாலையிலும் கற்று கிழக்குப்பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருந்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது இரசாயனவியல் துறை சிறப்புப் பட்டதாரி
என்பதுடன் துறைநீலாவணையினைச் சேர்ந்த செல்லத்துரை பகவதி தம்பதியினரின்
புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.